என் பங்குக்கு ஆகாசம்பட்டு பாணி வெண்பாக்கள் 5

நேரிசை வெண்பா

அடிச்சிக் கிறதால் அடிபம்ப்போ? இல்லே
கடிச்சிக் கிறதால் கடிபம்ப்! – தடிச்சிங்க
முட்டிக் கிறாள்வ; முடியும் பிடிக்கிறாள்வ;
திட்டிக் கிறாள்வ தினம்! 9

தோப்புக்குள் எங்கோ தொலைவில் மனசுக்குள்
தீப்பிடிச்ச காதலால் தீனமாய் – ராப்பகலாக்
கூவுங் குயிலே!கேள்; கூவாத பெண்நானே!
யாவும்மௌ னத்துள் இருக்கு! 10 ஆசிரியர் சேஷாசலம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Oct-19, 8:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

மேலே