தாவணித் தென்றல்

ஆவணி மாதத்தில்
அசைந்து வரும்
தாவணித் தென்றலே
குனிந்து நடந்து வரும்
கோபுர அழகே
கொஞ்சம் நிமிர்ந்து
பார்த்தால் என்ன
பார்க்கும் விழி இருந்தும்
பார முகம் ஏனோ
பக்தன் காத்திருக்கிறேன்
கண்டும் காணாமல்
செல்வதும் சரிதானோ ?
-----கவின் சாரலன்