தாவணித் தென்றல்


ஆவணி மாதத்தில்
அசைந்து வரும்
தாவணித் தென்றலே
குனிந்து நடந்து வரும்
கோபுர அழகே
கொஞ்சம் நிமிர்ந்து
பார்த்தால் என்ன
பார்க்கும் விழி இருந்தும்
பார முகம் ஏனோ
பக்தன் காத்திருக்கிறேன்
கண்டும் காணாமல்
செல்வதும் சரிதானோ ?

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Sep-11, 10:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 323

சிறந்த கவிதைகள்

மேலே