சிலையே உன்னை செதுக்கியாவன் யார் ?

மலையில் உறங்கும் அழகை
துயில் எழுப்பி மலரச் செய்தாய்
சிலை வடித்தாய்
மாமல்லபுரம் படைத்தாய்
ஆலயவாசளிலும் கோபுர அழகிலும்
கோவிற் தூண்களிலும்
உன் கைவண்ணங்களை இறைத்தாய்
கண்ணிற்கு தெரியாத கடவுளையும்
உன் கைவண்ணத்தினால்
கண்ணைப்பறிக்கும் எழில் வடிவாக்கினாய்
ஆண்டவனைப் போற்றும் ஆலயமும்
அன்று ஆண்டவனின் பெயர் சொல்லி வாழும்
சிலை வடித்த செம்மலே
சிற்ப கலை தந்த தேவனே
நின் பெயர் எங்கே தேடுகிறேன்
உன் கலையை சிலையில் முதலில் போற்றுவேன்
சிலையில் வாழும் இறைவனை
பின் போற்றுவேன்
நீ கற் சிற்பி
நான் சொற் சிற்பி
----கவின் சாரலன்