வம்பன் -- குறுங்கதை

ஏன்டா மாப்பிள்ளை உம் பையன் பொறந்து ஒரு வாரம் ஆகுது. பேரு ஏதாவது முடிவு பண்ணீட்டயா?
@@@@
இன்னும் இல்லை அத்தை. உங்களுக்கு பிடிச்ச பேரா இருந்தா பேரா இருந்தா ஒண்ணு சொல்லுங்க.
@@@@@@
ஏன்டா பையனைப் பெத்தவங்க நீயும் என் மகள் கண்ணம்மாவும். நீங்க ரண்டு பேரும் முடிவு பண்ணுங்க. இல்லன்னா என்னோட அண்ணன் அண்ணிகிட்ட கேளுங்க.
@@@@@@@
அம்மா அப்பா ரண்டு பேரும் என்னையும் கண்ணம்மாவையுமே கொழந்தை பேரை முடிவு பண்ணச் சொல்லீட்டாங்க. எங்க ஊரு வம்பக்கீரப்பாளையம். அதனால பையனுக்கு 'வம்பன்'-ன்னு பேரு வைக்க நானும் கண்ணம்மாவும் ஒருமித்த கருத்தோட இருக்கிறோம்.
@@@@@@@
ஏன்டா மாப்பிள்ளை பையா மருமகனே உங்க ஊருமேல உள்ள பற்றுள்ள எம் பேரனுக்கு 'வம்பன்'ன்னு பேரு வச்சா எதிர்காலத்தில வம்புச் சண்டைக்கு அலையப் போறான்டா.
@@@@@@
நீங்க சொல்லறதும் சரிதான் அத்தை. நீங்களே ஒரு பேரைச் சொல்லுங்க.
@@@@@
பேரன் பொறந்த ஒடனே எங்க குடும்ப சோதிடர் ஶ்ரீஇஷ்டலிங்க சாஸ்திரிகிட்ட கேட்டேன். அவுரு பையன் பொறந்த நேரத்தைக் கணிச்சு பையனுக்கு 'வம்சி'ன்னு பேரு வைக்கச் சொன்னாரு. அது சாமி பேராம்.
@@@@@
சரீங்க அத்தை. பையனுக்கு 'வம்சி'ன்னே பேரு வச்சுடலாம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Vamsi = Lord Krishna

எழுதியவர் : மலர் (3-Nov-19, 1:00 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 118

மேலே