கொஞ்சம் காத்திரு
கொஞ்சம் காத்திரு... அன்பெனும் மலரின் வாசம் உனை சேர்ந்திட...
கொஞ்சம் காத்திரு...
அன்று பெய்த மழையில் இன்று நனைந்திட..
கொஞ்சம் காத்திரு..
முடிவில்லாத பயணம் மீண்டும் தொடர்ந்திட..
கொஞ்சம் காத்திரு..
உன்னால் தான் நான் என்று உலகம் அறிந்துகொள்ள...
கொஞ்சம் காத்திரு.
முன்னுரை எனும் பக்கத்தில் உன் பெயர் என்னால் எழுதப்படும் நாள் வரை....
என்றும் சொல்லிடுவேன் உலகம் கடந்த அன்பு உன்னுடையது...