அமர்நாத் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : அமர்நாத் |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 285 |
புள்ளி | : 49 |
என்மேல் பொழிந்திடும் அன்பு மழையே உன் முகம் என் தோள்களில் சாய நான் ஆகிடுவேன் சிலையே; பிஞ்சு விரல் கோலம் இடுவதும் எந்தன் முகம் சிவந்திடுவதும் வானில் வரையும் ஓவியமாய் - உனை தாங்குவதே எனக்கு ஒரு வரமாய் - நீ தரும் புது ஓசை எல்லாம் இசை அறிந்திடாத ஸ்வரமாய் - கடக்கும் வாழ்விற்கு ஓர் உண்மை அர்த்தமாய் - என்றைக்கும் எனக்கான செல்லமாய் - என் சொல்வேன் உன் சிறுநடையே.... உனக்கென உள்ளது மறவாதே சீறும் நடையே ..
எட்டு வை ..
தறிகெட்டு திரியும் மனதிற்கு இதமான ஒரு பூங்காற்று உந்தன் நினைவு; கடல் அலையும்- அலையும் நீ நடந்த சுவடு தேடி; உன் சிரிப்பிற்கு பிறகே பூக்களுக்கும் இதழ் விரியும். தொலை தூர மேகங்கள் கண்ணில் நிற்பதில்லை அலைபாயும் மனதும் உனை மறப்பதில்லை.
பெண்மை பற்றி பேசிடும் ஆயிரம் வார்த்தைகள் காற்றில் வரையும் ஒவியமோ?
பார்க்கும் கண்ணோட்டம் மாறாதோ அவர்தம் வாழ்க்கை பின்னோட்டம் ஆவது நிற்காதோ?
எழும்பில்லா நாக்கு பெண்கள் கண்கள் என்றெல்லாம் ஏமாற்றிய சமாளிப்பு போதுமே! கண்முன்னே அரங்கேற்றம் தானே அதன் பெயர்கள் மட்டும் வேறு தானே..
தாய் என்ற அன்பின் உச்சம்.. அதன் ஆணிவேர் துளிர் விடும் முன்னே கருக்கி விட்டு பெண்மை பாதுகாப்பு என வேலி இடும் சமூகமே...
வெட்கி தலை குனிந்து மீண்டும் மீண்டும் குனிய இந்த நிலம் கூட தன் உமிழ் நீரை முகத்தினில் துப்புமடா...
சிறு துயில் நான் கொள்ள காதினிலே குடி கொள்ளும் உன் தாலாட்டு.
உனக்கு தெரியுமா என தெரியாது உன் தாலாட்டு தொடர நான் தூங்காமல் நடித்தேன் என்று.
அழகிய பொய்கள் அன்னையிடம் உண்மைகள் ஆகிடுதே.
ஏன்டியம்மா செம்பருத்தி அஞ்சு வருசம் கழிச்சு நம்ம கிராமத்துக்கு வந்திருக்கற. எல்லாம் நல்லா இருக்கறீங்களா?
😊😊😊😊😊😊
உங்க புண்ணியத்தில எல்லாம் நல்ல இருக்கறோம் பாட்டிம்மா.
😊😊😊😊😊
உங் கூட வர்ற சின்னப் பொண்ணு யாரு? உனக்கு ரட்டை பெண் கொழந்தைங்க பொறந்திருக்கிறதாத்தானே நாலு வருசத்துக்கு முன்னாடியே சொன்னாங்க.
😊😊😊😊😊😊
ஆமாங்க பாட்டிம்மா. நாங் காலைல பத்து மணிக்குத்தான் நம்ம ஊருக்கு வந்தேன். இவதான் ரட்டைக் கொழந்தைகள்ல மூத்தவ. சின்னவ அவ அப்பாகூட நாளைக்கு வருவா.
😊😊😊😊😊
ஓ.....அப்பிடியா. சரி இவ பேரு என்ன?
😊😊😊😊😊
இவ பேரு 'அர்ஷி' பாட்டிம்மா.
😊😊😊😊
இவ அரிசியா? அப்ப... சின்னப் பொண்ணு பேரு 'பருப்பா'?
😊😊😊😊
(நீயும் நானும்)
அன்பும் அறனும்
நீயும் நானும்
நம்பிக்கையும்
நாணயமும்
நீயும் நானும்
கார்மேகமும்
குளிர்காற்றும்
நீயும் நானும்
கண்ணும் இமையும்
நீயும் நானும்
காற்றும் மரமும்
நீயும் நானும்
தாயும் சேயும்
நீயும் நானும்
ஆசையும் மனமும்
நீயும் நானும்
இறைவனும் அருளும்
நீயும் நானும்
கதிரவனும் கிழக்கும்
நீயும் நானும்
பூவும் மென்மையும்
நீயும் நானும்
மண்ணும் பொன்னும்
நீயும் நானும்
கொடியும் கொம்பும்
நீயும் நானும்
(குழந்தையும் மழலையும்)
என்னுயிர் தோழியே
நீ பல்லாண்டு வாழியே...
இரண்டு எறும்புகள் இரவு சாப்பாட்டினை முடித்துவிட்டு காற்றுவாங்கிக்கொண்டிருந்தன.
"அரசியலைப்பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று ஒரு எறும்பு மற்றொரு எறும்பிடம் கேட்டது.
"அரசியல் என்பது சுயநலமாகிவிட்டது" என்றது அந்த எறும்பு.
"சரி காதல் என்பது என்ன?"
"காதல் அதன் புனிதத்தை இழந்துவிட்டது" என்றது.
"கொள்கையை பற்றி என்ன நினைகிறாய்" என்று கொட்டாவி விட்டபடியே கேட்டது எறும்பு.
"நீ விடுகிற கொட்டாவியைப்போலத்தான் கொள்கையும் அதை விடாமல் இருக்க முடியாது" என்றவுடன் அதற்கும் கொட்டாவி வந்துவிட்டது.
"சரி கடவுளை பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று வினவியது.
" நான் கடவுள் நீயும் கடவுள்" என்று புன்னைகை
நாங்கள் தினந்தோறும்
அழுதுகொண்டே இருக்கிறோம்
காலை எழுந்தவுடன்
கண்ணீர் சிந்துகிறோம்
கழிவு கலந்த உணவை
உண்ணுகிற போது அழுகிறோம்
உங்கள் பிச்சைக்காக நாங்கள்
அழுது கொண்டே தான் இருக்கிறோம்
இச்சமூகத்தில் நாங்கள் பிறந்தபோது
சுவாசித்த முதல் காற்று
உங்கள் வீட்டு கழிவறை நாற்றம்
எங்கள் நாட்கள் இருட்டாக தான் இருக்கும்
ஏனென்றால் எங்கள் வாழ்வின் சூரியன்
உதயமானதே இல்லை
எங்களது மரணம் உங்களது
திட்டமிடப் பட்ட கொலை
எங்கள் கண்களில் ஈரமும் இல்லை
கதறுவதற்கு நேரமும் இல்லை
நாங்கள் கழுவ வேண்டிய கழிவறைகள்
இங்கே நிறைய உள்ளன
எங்களிடம் காயங்களும் கண்ணீரும்
நிறையவே உள்ளன
நிராகரிப்பின் நிழல் நாங்கள்
ப
அனைவரின் வாழ்த்துக்களும் எனக்கு வந்தாகிவிட்டது..
எதுவும் என்னை மகிழ்விக்கவில்லை.
உன்னோடு நான் இன்றி உன் உதடுகள் உச்சரிக்கும் வாழ்த்துக்கள் இன்றி..
காத்திருக்கிறேன் உன் ஒரு வார்த்தைக்காக ..
வெண்ணிற வானில் கருநிற நிலவு !!!
- அவளது கண்கள்
எட்டு திசைகளை காட்டும் திசை காட்டும் கருவி !!!
- அவளது கண் அசைவுகள்
கருப்பு வெள்ளை மயிலிறகு !!!
-அவளது மையிட்ட கண்கள்
பறக்கின்ற ஒரு பட்டம்பூச்சியின் சிறகுகள் !!!
-அவளது கண்ணிமைகள்
கண்ணீர் முத்துக்களைக் காக்கின்ற கடற்சிப்பி !!!
-அவளது மூடிய இமைகள்
விழி அருவியிலிருந்து விழுகின்ற உப்பு தீர்த்தம் !!!
-அவளது கண்ணீர் துளிகள்
விழி வீட்டிற்கு வழி சொல்லும் தார்ச்சாலைகள் !!!
-அவளது புருவங்கள்
உன் விழியசைவு
ஒரு எழுத்தைப்போல
எனக்குத் தெரிய
எதேச்சையாக தான்
எட்டிப் பார்த்தேன்
நான்
பின் அது
ஒரு வார்த்தை
என நினைத்து
வாசிக்கத் தொடங்கினேன்
இல்லை என்று
சிமிட்டிய உன் விழிகள்
ஒருவேளை
ஒரு வரிபோல
என நினைத்து
தொடர்ந்தேன்
இல்லை என்று
சிரித்த உன் விழிகள்
ஒருவேளை ஒருபக்கமோ
முனகலோடு தொடர்ந்தேன்
முழுதாய் படித்திட்டேன்
முழுதாய் தொலைந்தேன்
முடிந்ததென நினைத்தேன்
இல்லை என்று
சிரித்த உன் விழிகள்
என்ன என்று
தெரியாமல் தொலைந்த
என் இதயம் ...
தயக்கத்தோடு கொஞ்சம்
பக்கத்தைப் புரட்ட
முடியாமல் நீண்ட
உன் பக்கங்கள்
என் கனவுகளின்
புத்தகமானது ...
இருள் படர்ந்த காடுகளில் நிலாவுக்கு துணையாகும் மின்மினிப்பூச்சிகள்.
ஓய்வில்லா கடல் அலைகளில் நிலாவுக்கு துணையாகும் கலங்கரை வெளிச்சங்கள்.
மனிதர் வாழும் இடங்களில் நிலாவுக்கு துணையாகும் மின்னொளி விளக்குகள்..
இத்தனை துணைகள் இருந்தும் என்றுமே நிலாவுக்கு துணையாவது ஒளிரும் நட்சத்திரங்களே..