பெண்மை

பெண்மை பற்றி பேசிடும் ஆயிரம் வார்த்தைகள் காற்றில் வரையும் ஒவியமோ?

பார்க்கும் கண்ணோட்டம் மாறாதோ அவர்தம் வாழ்க்கை பின்னோட்டம் ஆவது நிற்காதோ?

எழும்பில்லா நாக்கு பெண்கள் கண்கள் என்றெல்லாம் ஏமாற்றிய சமாளிப்பு போதுமே! கண்முன்னே அரங்கேற்றம் தானே அதன் பெயர்கள் மட்டும் வேறு தானே..

தாய் என்ற அன்பின் உச்சம்.. அதன் ஆணிவேர் துளிர் விடும் முன்னே கருக்கி விட்டு பெண்மை பாதுகாப்பு என வேலி இடும் சமூகமே...

வெட்கி தலை குனிந்து மீண்டும் மீண்டும் குனிய இந்த நிலம் கூட தன் உமிழ் நீரை முகத்தினில் துப்புமடா...

எழுதியவர் : அமர்நாத் (17-May-20, 6:36 pm)
சேர்த்தது : அமர்நாத்
Tanglish : penmai
பார்வை : 100

மேலே