சிறுநடை

என்மேல் பொழிந்திடும் அன்பு மழையே உன் முகம் என் தோள்களில் சாய நான் ஆகிடுவேன் சிலையே; பிஞ்சு விரல் கோலம் இடுவதும் எந்தன் முகம் சிவந்திடுவதும் வானில் வரையும் ஓவியமாய் - உனை தாங்குவதே எனக்கு ஒரு வரமாய் - நீ தரும் புது ஓசை எல்லாம் இசை அறிந்திடாத ஸ்வரமாய் - கடக்கும் வாழ்விற்கு ஓர் உண்மை அர்த்தமாய் - என்றைக்கும் எனக்கான செல்லமாய் - என் சொல்வேன் உன் சிறுநடையே.... உனக்கென உள்ளது மறவாதே சீறும் நடையே ..

எட்டு வை ..

எழுதியவர் : அமர்நாத் (17-May-20, 6:47 pm)
சேர்த்தது : அமர்நாத்
பார்வை : 78

மேலே