கண்களில் வைத்து உன்னை காண்கிறேன் 555
என்னவளே...
இரவெல்லாம் கண்களை மூடி
உன்னை காண்கிறேன்...
என்னெதிரில் நீ
வராத
நாட்களில்...
கண்களை கடந்து
ஓடும் வலிகளை...
உள்ளத்தில்
தேக்கி வைக்கிறேன்...
உன்னை எதிர்பார்த்து
காத்திருக்கும் இதயத்திற்கு...
தினம் தினம் சொல்கிறேன்
அவள் வந்துவிடுவாள் என்று...
என் உதடுகள்
சொல்கிறது பொய்...
என் இதயமும்
நம்புகிறது உண்மையென...
என் வாழ்வில்
வசந்தம் வீசிவிட...
வந்துவிடுவாயோ நீ
மீண்டும் என் வாழ்வில்.....