உன் இதயவாசலை தேடி வந்தேன் 555

உயிரானவளே...

உன்னை சுற்றியே
வந்தேன் தினம்தினம்...

உன் மனதில் வசந்த
மண்டபம் அமைக்க...

உன் இதயவாசலை
தேடிவந்த நான்...

இதோ மயான வெளியை
நோக்கி போகிறேன்...

நீ தினமும்
கண்விழித்ததும்...

நான் உறங்கும் மண்ணை
பார்த்து ஒரு பெருமூச்சுவிடு...

ஆண்டுக்கு ஒருமுறை
நீயே நீரூற்றி வளர்க்கும்...

செடிகொடிகளின்

அழகிய சிரிப்புகளை...

என் சமாதியின்
மேல் வைத்துச்செல்...

அதுபோதுமடி எனக்கு
என் ப்ரியமானவளே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Nov-19, 8:25 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 444

மேலே