பாதுகாப்பு

பூட்டி யிருக்கும் கோவிலுள்ளே
பார்த்தது போதும் பிள்ளைகளே,
வீட்டி லுள்ளோர் தேடிடுவர்
விவரம் ஏதென அஞ்சிடுவர்,
நாட்டி லுள்ள நடப்பறிய
நம்பி வருவீர் பெற்றோருடன்,
வேட்டை யாடும் உலகமிது
வெளியே யில்லை பாதுகாப்பே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-Dec-19, 11:12 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 76

மேலே