வலியால் மனம் வாடுகிறதே

அலையடிக்கும் கடல் போலே
ஆசை வந்து அழற்றுதடி
அழகு நிறைந்த முகத்தாளே
அன்பாய் என்னிடம் புன்னகைத்து
ஆறுதலை எனக்குள் கூறேன்டி
கறையான் அரித்ததைப் போல்
பெரும் வலியால் மனம்
பொறுமையின்றி துடிதுடித்து
பித்தனாய் எங்கும் அலைகின்றேன்
பெருமைமிகு வாழ்வை வாழ்ந்துவிட
பெண்ணே என் கைத்தலம் பற்றுவாயோ.
____ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Dec-19, 11:49 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 74

மேலே