புத்தாண்டு வாழ்த்துக்கள்

நீள அகல உயரம்
தெரியா பிரபஞ்சம்..
சூரியக் குடும்பம்.. சுற்றும் பூமி..
புவியின் ஈர்ப்பு விசை..
ஆயிரங்களில் உயிரினங்கள்..
ஆறறிவு மனித இனம்..
அனைத்தையும் இயக்கும் சக்தி..
இவை எல்லாம்
இறைவனின் அற்புதங்கள்...

காற்றும் நீரும்
வானும் நெருப்பும்
இறைவன் வழங்கிய அருட்கொடை...
அனைவருக்கும் பொதுவான
அற்புத கொடை...
இதனால் பூமியில் பிறந்த
அனைவருமே செல்வந்தர்கள்...
நலமுடன் வாழட்டும் மாந்தர்கள்...
மணம் வீசும் மலர்களாய்
நந்தவனத்துத் தென்றலாய்..
ஒருவொருக்கொருவர் இசைவாய்....

நித்தம் சொல்லும் வாழ்த்துக்களில்
இருக்கிறது ரத்த ஓட்டம்..
புத்தாண்டு வாழ்த்துக்களில்
இருக்கிறது உயிரோட்டம்...

புத்தாண்டுகள் பல வரும்...
இதயங்களை மீட்டும்
இரண்டாயிரத்து இருபது
ஒருமுறைதானே வரும்...
அதன் தனித்துவத்தில்
தலைமுறைகள் உயரட்டும்...

முதன்மையானவற்றை
முதலாய்ச் செய்து...
முடிவினை மனதில் வைத்த
ஆரம்பம் கொண்டு...
செயல்களை முந்திச் செய்து...

புரிந்தபின் புரியவைத்து...
ஜெயிக்கவிட்டு ஜெயித்து...
ஒன்று பட்டு உழைத்தால்
பத்தும் பத்தும் இருபதல்ல
அதற்கும் மேல் என்பதறிந்து...

வெற்றிகளை நோக்கிய
இனிய பயணத்தில்
கத்திகளை வெல்லும்
கூர்மையான யுக்திகளைத்
தனதாகக் கொண்டு...
இந்த ஏழு ஸ்வரங்களின்
இனிய ராகங்களில்...
புத்தாண்டின் புத்தொளியில்...
வழிகளும் வானமும் வசப்படும்...
வசந்த விடியல்களில்
முட்களும் பூக்கட்டும்...

தீதும் நன்றும்
பிறர் தர வாரா...
விடியல்கள் ஒவ்வொன்றிலும்
உழைக்கின்ற வலிமையும்
உற்சாக மனநிலையும்
புத்தாண்டில் எல்லோருக்கும்
இனிய பரிசாகட்டும்...

இருபது... இருபது...
சேர்த்து எழுதினால்
இரண்டாயிரத்து இருபது...
ஒருங்கிணைந்து வாழ்வதில்
உயர்வு இருக்கிறது...

அனைவருக்கும்...
இனிய புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்...

நட்புடன்...
அன்பன் ஆர்.சுந்தரராஜன்...
👍🙋🏻‍♂👏🙏🎂🍰🌷🌹😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (1-Jan-20, 10:33 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 120

மேலே