என் இதயத்தை உடைக்காதே

உன்னை
நூலகத்தில் சந்தித்தபோது
"என் இதயத்தை உடைக்காதே"
என்ற புத்தகம் தந்தாய்
காதலின் பரிசாக ......

உன்னை
கடற்கரையில் சந்தித்தபோது
"என் காதல் படகு "
என்ற பலூனை
நீ தந்தாய்
காதலின் பரிசாக .......

உன்னை
கல்லணையில் சந்தித்தபோது
நீ தான்
என் கரிகாலன்

என் காதல் கண்ணீரை
சேமிக்கும்
உன் உள்ளங்கை
ஓர் கல்லணை

என் விழி நோக்கும்
உன் பார்வை
ஒரு விண்மீன்

உன் விரல்கள்
எனை மீட்டும்
ஒரு வீணை

உன் மேனி
நான் விளையாடும்
காதல் மைதானம்

உன் மீசையை ரசிப்பது
என் இதயத்தின்
ஆசை

உன்னை ரசிப்பது
என் மனதின்
ஆசை

உன்னை -நான்
கைவிட்டால் எனக்கு
கிடைக்காது ஒரு
நல் ஏணி

ஏன்? ஏன்? ஏன் ?

நீ
முரடனாய் இருந்தாலும்
முரட்டுக்காளையை
அடக்குவாய் யென்னை
அடக்கியமாதிரி

உன்மீது
நான் ஏறி
என்மீது நீ ஏறி
காதல் விண்மீனை
கைகளால் பறிப்போமா
அதுகிடைக்காமல் போனாலும் ......

இந்த
பெண்மீனை
நீ -பறிப்பாய
நீ -பறிப்பாய யென
காதல் புத்தகம்
கொடுத்தாயே

நீ
கொடுத்த
அனைத்தும்
காதல் பரிசு
உனக்கு நான்
கொடுக்கப்போறேன்
கணவன் யென்ற வாழ்கை பரிசு. .

எழுதியவர் : இரா . அரிகிருஷ்ணன் (7-Jan-20, 7:21 pm)
பார்வை : 300

மேலே