நினைவெல்லாம் நீயே

நித்தம் நித்தம் நீங்காமல் கொள்கிறதே உன் நினைவு...
சத்தமில்லா இரவுகளில் சங்கீதமாய் உன் பதிவு..

அடிக்கடி கூவும் அலைபேசி ஓசை
அழைப்பது நீயா இருக்க ஆசை

எதிர்பாரா நேரத்தில் ஓர் குறுந்தகவல்
அதிலும் பெயர் கண்டதால் புன்முறுவல்

அலைபேசி திரையிலும் உன்முகமே
உனை மட்டும் தேடுதடி என் மனமே

தூக்கமும் தொலைந்ததடி உன்னால் ஏக்கமும் நிறைந்ததடி
நீயில்லா நேரமது இதயம் பல இன்னல் காணுதடி..

எழுதியவர் : YuVa D (7-Jan-20, 7:05 pm)
சேர்த்தது : யுவா ஆனந்த்
Tanglish : NINAIVELLAM neeye
பார்வை : 704

மேலே