உன் அழகு

உதய காலை வேளையில் உன் முகத்தில்
விழித்த நான் மலரும் தாமரையின் பொலிவு கண்டேன்
என்னுள்ளம் பூரித்தது பொழில் தரும் உந்தன்
முகத்தின் ஒளி என் முகத்தில் பிரதிபலிக்க
அதில் ஓர் ஒளி சேர்த்து ......
அந்தி மாலை வேளையில் உன்முகம்கண்டேன்
அமுதைப் பொழியும் நிலவின் ஒளியாய்
பெரிதாய் அலர்ந்த சிவந்த அல்லிப்பூவாய்
என்னை ஆளவந்த அழகு ராணி நீ
எனக்கு ரவி கிரனாய் இந்து கிரனாய்
மாறி மாறி ஒளி சேர்த்து என்னை
காலையில் ஊக்குவித்து பணி செய்ய
வழி வகுத்து மாலையில் மனம் குளிரவைத்து
காதல் இன்பமும் தருகிறாய்
என்னென்பேன் உந்தன் அழகின் லாவணியத்தை
பஞ்சம வேதமோ நீ .... பெண்ணே

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (21-Jan-20, 4:38 pm)
Tanglish : un alagu
பார்வை : 275

மேலே