நாளெல்லாம் பௌர்ணமி உன்னால் 555

உயிரானவளே...



உன்னை நினைக்கும்
போதெல்லாம்...



என் கண்களில்
கண்ணீர் துளிகள்...



நீ என்னை
மறந்த பொழுதும்...



என் உயிர் என்றும்
உனக்காக காத்திருக்கும்...




பகலில் விண்மீன்களை
தேடுகிறேன் விண்ணில்...



இரவினில்
கதிரவனை தேடுகிறேன்...



நீ என்னை
தூக்கி
எறிந்த பிறகும்...



உன்னையே நினைக்கிறன்
என் கரம் கோர்ப்பாய் என்று...



உன் நினைவுகள்
என்னில் இருக்கும்வரை...



தனிமை என்னும்
கவலைகள் இல்லை எனக்கு...


என் வாழ்வில் நாளெல்லாம்
பௌர்ணமியை பார்க்க துடிக்கிறேன்...



நீ என்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நாளும்...



எனக்கு பௌர்ணமி
தானடி காத்திருக்கிறேன் நான்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (25-Jan-20, 4:59 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 696

மேலே