உனக்காக நான் காத்திருக்கிறேன் 555

என்னுயிரே...



மலைகளில் ஆயிரமாயிரம்
பாறைகள் இருந்தாலும்...



கோவிலில் சிலையாக
மாறும் பாறை எது...


குளத்தில் படியாகா மாறும்
பாறை எது தெரிவதில்லை...



தினம் பூத்து
சிரிக்கும் மலர்களில்...



மாலையாகும்
மலர்கள் எது...



பூஜைக்கு போகும்
மலர்கள் எது தெரிவதில்லை...



இந்த மனித
வாழ்க்கை உன்னோடா...



இல்லை நான்
பிறந்த மண்ணோடா...



எதுவும் தெரியாமலே
நானும்
உன்னை தொடர்கிறேன்...



நீ காத்திருக்க வைக்கிறாய்
நான் காத்திருக்கிறேன்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (21-Jan-20, 8:28 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1473

மேலே