பரமரகசியம் 8 முப்பூ

பரமரகசியம் 8

முப்பு (மூன்று உப்புக்கள்)

என்னவே வானத் திடியினி லொன்று
சொன்ன தோர்பூமி சூலினி லொன்று
கன்னிற மான கடலினி லொன்று
முன்னர் சொன்ன மூன்று முப்பூவே

இந்த மூன்று உப்புக்களும் மும்மூர்த்தி உப்பென்பர். பிரம்மா விஷ்ணு சிவ உப்பென்பர்
ஆகையால் முப்பூ எதையும் படைத்துக் காத்து அழிக்கும் எனும் மூன்று தொழிலையும்
திறம்பட செய்யும் வல்லமை வாய்ந்த உப்புக்களாகும்.

இந்த முப்பூவை அறியாதவன் சித்தனல்ல யோகியல்ல முனியல்ல ரிஷியல்ல என்பதைப்
புரிந்து கொள்ளுங்கள். இந்த மூன்றையும் குறிப்பதே காலென்றும் தலையென்றும் சொல்வர்
இதைத்தான் சாகாக் கால் என்றும் வேகாத்தலை என்றும் போகாப் புனலென்றும் சொல்வர்.
இந்த தேவ உப்புக்கள் மூன்றும் சேர்ந்ததே கா ய க ற் ப ம் ஆகும்.

வானத்தின் இடியில் ஒன்று . வானத்தில் இடிக்கின்ற இடியானது பஞ்சப்பூத சரக்காகும்.
1. வானம் (இடியோசை) 2. மின்னல் (நெருப்பு) 3.காற்று சூரிய வெப்பத்தால் 4. தண்ணீர்
காற்றான நீரா விக்காற்றாகி 5. நிலத்தில் இடியாய் நுழைகிற தாம். இப்படி சுமார் 16 முழம்
ஆழத்திற்கு. நுழைந்து நிலத்தை பல விதமாக இரசாயன மாற்றங்களை ஏற்படுத் துகிறது .
இப்படி வானத்தின் இடியில் இடியுப்பு என்று வி கேள்விப்படாத உப்பு பூமியின் கீழே சென்று
அந்த வகையில் பழுக்க வைக்கிறது. இந்த இப்பு 12 மாமாங்கம் வரை பூமியிலிருந்து
நிலத்தை தின்று உப்பாக மாறுகிறது. இதுவே நிலஉப்பு அல்லது பேரண்டக்கல்லுப்பாகும்.

2. இப்படி பூமியிலிருக்கும் சிவனுடைய இடியுப்பு பூமியோடு சேர்ந்து 144 வருடம் கழித்து
பூமியை சூலாக்கி ஆண்பெண் அலியெனும் பிள்ளைகளை ஈனுகிறது.. இவற்றை பூமி
நாத உப்பென்பர்.

3. இதே போன்று வானத்தில் இடிக்கும் இடியில் ஏற்படும் உப்பை இடியானது கடலில் விழ
அந்தஇடத்தில் கடல்நீரானது குறிப்பிட்ட இடம் வரை சுழற்சி ஏற்பட்டு தயிrபோலக்கடையப்
பட்டு கடலிலேயே கட்டி கட்டிகளாக கடலுப்பாக மாறுகிறது.

இந்த மூன்றும் சேர்ந்ததே முப்பு என்கிறார்கள் யோகி,முனிகள் ரிஷிகள் சித்தர்களும்.
இதைபடித்த் அறிவாளிகள் (வாமிகள்) இதை நேரம் காலம் பார்த்து முறைகள் தெரிந் து அவற்றை எடுத்து பக்குவப் படுத்தி காய கற்ப மாக்கி சாப்பிட்டு ஆயுளை நீட்டிகொள்கின்றனர்..

எழுதியவர் : பழனிராஜன் (27-Jan-20, 3:43 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 50

சிறந்த கட்டுரைகள்

மேலே