சஹாரா பாலை வனத்தில் நீ நடந்தால்
சஹாரா பாலை வனத்தில் நீ நடந்தால் --காற்று
சஹானா ராகம் பாடும்
நைல் நதியில் நீ நீந்தினால் ----நீல நைலும்
வானவில்லின் ஏழு நிறங்களில் ஓடும்
பனிபடர்ந்த இமய மலையில் நீ நடந்தால் ----பனி உருகி
பனிநீரோடையாகித் துள்ளி ஓடும்
நீ எங்கிருந்தாலும் எங்கு நடந்தாலும் ---என் கவிதை
உன்னை மட்டுமே பாடும் !