நண்பா நீ
நண்பா நீ....
கோபுரத்தில் வைக்க வேண்டிய அழகிய கும்பம்.
மலை உச்சியிலிருந்து புறப்படும் தென்றல்.
விடியற்காலை மலர் இதழ்களின் உறங்கும் அழகிய
பனி துளி.
அதிகாலை ஆதவன்.
நல்ல நூல் கொடுக்கும் ஞானம் பெற்றவன்.
அழகிய கவிதை.
சிந்தனையில் தெளிந்த நீரோடை.
பாசத்தில் வற்றாத ஜீவ நதி.
உள்ளத்தில் பெருங்கடல்.
பூமியின் குணம் கொண்டவன்.
வானம் போல் எண்ணம் உள்ளவன்.
அன்பை அள்ள அள்ள கொடுக்கும் அமுதசுரபி.
வாழ்க பல்லாண்டு
வாழ வேண்டும் பல நூறாண்டு.
உன் நண்பன்
- பாலு.