யாழ் மனம்

புழல்வாழ் யாழின் மெய்த்திறந்து
மயில்வாகனம் மணற்பால் பாட்டொழித்து

மனவளம் பார்கண்டு மணல்திரிந்து
மட்டு மங்கா கணிதமாய் பறந்தெளிந்து !

பூக்கோளம் வாலிர்பிடித்து கைக்குட்டை
நனையா பெண் பொய்யாய் கண்டொழிந்து !

கானல்நீர் கையில்வழிந்து அழகுக்
கைக்குழந்தையாய் மணற்கடல் பொழிந்து !

வெளிவட்ட மைத்தரையில் மடைதிறந்து
கண் அறியா காகிதச் செம்மொழிந்து !

பட்டம் திசையறியா பாதை படைத்து
கண்ணீரின் ஆழ் ஊற்று பிளந்து !

தேர் நிலை வாழ்தடம் பதித்து
ஓர்நிலை பெருநிலை சிறப்பியல்ந்து !

மண்ணின் உச்சிமலைக் காற்று
ஊழ்வினை காற்றாய் பேசினாய்
மொத்தமாய் நீயடி !

எழுதியவர் : வேல்முருகானந்தன் சி (13-Mar-20, 5:56 pm)
பார்வை : 70

மேலே