பெண்ணே

பெண்ணே!
============================================ருத்ரா

பெண்ணே!
ஒரு நாள் போதுமா?
பெண்ணே!
மகளிர் தினம் என்று
உன் பெருமை போற்ற!
சிந்தனையும் அறிவும்
கூடவே
இந்த உலக உயிர்த்தொகையை
செழிக்க வைக்கும்
கருவூலமாகவும்
இருக்கும் உனக்கு
ஒரு நாள் போதுமா?
பெண்ணே!
தெய்வமே நீதான்
என்று
ஸ்லோகம் குவித்தவர்கள்
உன் படைப்புத்தன்மையையே
தீட்டு
என்று கொச்சைப்படுத்தும்
குறுமதியாளார்களைக் கண்டு
சீற்றம் கொண்ட‌
ஆழிப்பேரலைகள்
என்று அலைவிரிக்கின்றனவோ
அன்று தான்
இது மகளிர் தினமாக மட்டும் அல்ல‌
ஆண் பெண் இரு பாலருக்குமே
ஒரு புதிய யுகத்தின்
பொது விழாவாக‌
மலர்ச்சியுறும்.
அது வரை இந்த காகிததோரணங்கள்
குப்பை குவிக்கட்டும்.
இதில் யாருக்கும் வெட்கமில்லை.

==============================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (15-Mar-20, 2:32 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : penne
பார்வை : 101

மேலே