திருமணம் அழகானவன் எங்கே
திருமணம் அழகானவன் எங்கே?
@@@@@@@@
வீட்டிலிருந்து வெளியில் வந்த ஒரு
பெரியவர்: யாருடா அவன் "திருமணம்
அழகானவன் எங்கே" ன்னு கேட்டவன்?
@@@@@@@
நான் தான் தாத்தா. திருமுருகன்.
@@@@@@@
ஓ ... திருமுருகனா? வாடாப்பா. நல்லா
இருக்கிறயா?
@@@@@@
நல்லா இருக்கிறேன் தாத்தா. நீங்க நலமா
இருக்கிறீங்களா?
@@@@@@
எனக்கென்னடா கொறை. தினம் மூணு
மைல் நடக்கிறேன். உன்னை மாதிரி
இளந் தலைமுறைக்குத் தான் பக்கத்துத்
தெருவுக்குப் போகக்கூட வண்டி
தேவைப்படுது. சரி வர்ற் போது "திருமணம்
அழகானவன் எங்கே?" ன்னு கேட்டுட்டு
வந்தயே ஏன் அப்படி கேட்ட?
@@@@@@
உங்க பேரனைத் தான் தாத்தா கேட்டேன்.
@@@@@@
எம் பேரன் பேரு கல்யாணசுந்தரம். நீ
"கல்யாணசுந்தரம் எங்கே"ன்னு தானே
கேட்டிருக்கணும்?
@@@@£££
நானும் அப்படித்தான் தாத்தா கேட்டேன்.
@@@@@@
புரியலயே.
@@@@@@@
தாத்தா, 'க்ல்யாணம்'ன்னா 'திருமணம்'.
'சுந்தரம்'ன்னா அழகானவன்'. இப்பப்
புரியுதுங்களா?
@@@@@@@
டேய் திருமுருகா நீ எங்கிட்டயே உன்னோட
வேலையைக் காட்டிட்டடா.

