அவன்-அவள் -கொரோனா வைரஸ்

கட்டியணைக்கவே காதலியே
இவ்விரவில் முழுநிலவில் ஒளிரும்
உன் இனிய முகம் என்னுள் ஆவல்
மிக மூட்டுதே என் கண்ணே …………………………………………..அவன்

ஒட்டி உறவாடல் வேண்டாம் இப்போது
என் அன்பேஎன்அன்பே
எந்த புற்றில் எந்த பாம்புளதோ யாரறிவார் ?...………………….. அவள்

கண்மணியே என் கண்ணின் ஒளியே
ஏன் இப்படி தத்துவம் பேசுகிறாய் இன்று
காரணம் அறியேனே நான் சொல்லமாட்டாயோ நீ …..
எது எப்படியானாலும் காதலியே
காய்ந்து கிடைக்கும் என் கன்னத்திற்கு
ஒரு சிறு முத்தம் தந்துகூட தர மாட்டாயோ
என் தாகம் கொஞ்சம் தீர உந்தன்
மாதுளை இதழ்கள் சற்றே விரித்து புன்னகைத்து ……………… அவன்

பொறுத்திரு கண்ணா பொறுத்திரு
களமும் நேரமும் சற்றே இனிதாய் கூடி வர
உன் கோரிக்கையும் நிறைவேற
இன்னும் நீ அறியாயோ கண்ணா பாரெங்கும்
'கொரானா உயிர்க்கொல்லி' ஆட்டிப்படைக்குதே
'கைக்குலுக்கலும் கூடாது என்கின்றார் மருத்துவ நிபுணரும்
ஆதலால் என் அன்பு காதலனே இப்போதைக்கு
கட்டிஅணைத்தலை மறந்துவிடு ……
இதோ தருகிறேன் ' பறக்கும் என் ஆசை முத்தங்கள்'
முத்து முத்தாய் சிதறி வருதே பார் ஏற்றுக்கொள்
புன்னகையால் உந்தன் உள்ளம் நிறைப்பேனே நான் அதுவரை
உயிர்க்கொல்லி கொரநா அழிந்துவிடும் திண்ணம்

நாளை நமதே நமதே …...சென்றுவா
என் காதல் தேவனே என் மன்னவனே …………. அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Mar-20, 1:13 pm)
பார்வை : 220

மேலே