கொரோனா சொல்கிறேன் என்னை அழுத்தி விடுங்கள்

எங்கிருந்து வந்தேன் என்று
எனக்கே தெரியவில்லை
இன்னும் புரியவில்லை...

இப்படி மக்கள் எல்லாம்
அழிவார்கள் என்றும்
அவதி படுவார்கள் என்றும்
கொஞ்சம் கூட நினைக்கவில்லை
இனி மண்ணில் வாழ பிடிக்கவில்லை....
என்னை அழுத்தி விடுங்கள் நண்பர்களே....

எத்தனை விஞ்சானி இருந்தும்
எத்தனை அறிவாளி இருந்தும்
எத்தனை புத்திசாலி இருந்தும்
எத்தனை திறமைசாலி இருந்தும்
என்ன பயன் நண்பர்களே...

என்னை அழிக்க இன்னும்
ஒரு மருந்து கூட
கண்டு பிடிக்க முடியவில்லையே

என்னை ஒழிக்க இன்னும்
ஒருவர் கூட முயற்சி
எடுக்க முடியவில்லையே....

நான் இந்த உலகில் உள்ள
அனைத்து சொந்தம், பந்தங்களை
எல்லாரையும் பிரித்துவிட்டேன்...
என்னை மன்னித்து விடுங்கள் நண்பர்களே....

ஊரடங்கு முயற்சியால்
நான் அழிந்து விடுவேன்
என்று உங்களை நம்புகிறேன்...

தொடருங்கள் இன்னும்
கொஞ்சம் நாள்...
வாழ்வீர்கள் இன்னும்
பல நாள்...

உங்கள் கையை
சோப்பு போட்டு கழுவுங்கள்
உங்கள் வாயை
கவசம் போட்டு மூடுங்கள்

வெளியில் சுத்த வேண்டாம்
வெயில் அலைய வேண்டாம்

தனித்திருங்கள்...
விழித்திருங்கள்...
என்னை ஒழித்துவிடுகள்...

எழுதியவர் : இதயவன் (5-Apr-20, 5:42 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 138

மேலே