சமுக பற்றின் தேடல்

விஞ்ஞான அறிவில் விளைந்த

வேடிக்கை இனமோ - நாம்

மெய்ஞான அறிவிழந்து

ஊடகத்தில் உணர்விழக்கும்

வாடிக்கை இனமோ நாம் ...

சரித்திரங்கள் எழுந்த போதும்
- அன்று
சமத்துவமோ அகலவில்லை

இலக்கியங்கள் இயைந்த போதும்
- மன
இருட்டென்பது இணையவில்லை

சரித்திரங்கள் பலவற்றை

தரித்திரத்தில் எறிந்தோம்

சமத்துவம் தான் அது தன்னை

சாதி சமுத்திரத்தில் எரித்தோம்...

மகத்துவமே சேர்ந்தன - அன்று

மாண்டோர் பலராலே - அதன்

அதன் மகிமை இழந்து
தவிக்கின்றோம் - நம்
மதி கெட்ட செயலாலே...

இன வறுமை தனை அடைந்து
நின்றோம்
பல உரிமை தனை இழந்து
நின்றோம்

அடுத்த நொடி வாழ்விற்கும்

அகதிகளாய் அலைகின்றோம்-அதை

எடுத்துணர மனம் இருந்தம் - பண

ஏற்றத்தால் சாகின்றோம் - ஆயினும்

ஆணவமும் அகலவில்லை - நம்

ஏளனமும் குறையவில்லை....

தாய் தந்தை உற்றாரையே

தரணியில் தவிக்க விடும்

தரம் கெட்ட மனம் நம்மில்

சரீரத்தில் உணர்வுமேது...

சமுகத்திலோ பற்றுமேது?????...

எழுதியவர் : சுவாதிகுணசேகரன் (18-Apr-20, 1:57 pm)
பார்வை : 76

மேலே