நன்றி

நன்றி உரைத்திட
நானும் விழைகிறேன்
மெளனமாய்
புன்னைகைத்து
திரும்பும் மனம்

நினைவுகளின் அலைவரிசை
நினைத்தநொடி பயணம்
நீங்காத எண்ணமாய்

நிழல்பதிவினில்
பள்ளியில் வகுப்பினில்
முன்நிற்கும் மாணவனே..
முழுதாய் ஏறிட்டும்
பார்த்திராத என்நண்பனே
உன்னிடத்தில் பேசியவை
விரல்விட்டு எண்ணிடுவேன்
அவ்வளவே
அப்படிதான் போனது
என் பத்தாம் வகுப்பு.


ஆகட்டும்
பிரபஞ்ச ரகசியம்
படைத்தவன் அன்றி
யாரறிவார்....

மீண்டுமாய்
மீட்டெடுத்து
மீள்பதிவாய்
நீள்கதையாய்
கவிதைகளை
வடிக்கவைத்திட்ட
இறைவனுக்கு நன்றி
இன்முகமாய் முகம்காட்டும்
இனியவனே உனக்கும் நன்றி

போகட்டுமே
நட்பு தேரோட்டம்....
நானிலத்தில்
நன்றியுடன்

எழுதியவர் : (20-Apr-20, 4:15 am)
சேர்த்தது : krishna viji
Tanglish : nandri
பார்வை : 246

மேலே