வரம் தருவாயா
கண் ஓர மை போல கண்ணீரில் கரையாமல்
இருவிழியின் கருவிழியை இமை போல காத்திடுவேன்
காதின் ஓரமாய் மெல்ல காதல் சொல்லவே
தங்க கம்மலாக ஊஞ்சல் ஆடிடுவேன்
மூக்கின் மீது உன் மூச்சை தீண்டவே
வைர மூக்குத்தியாக நான் மாறிடுவேன்
உதட்டின் ஓரமைய் வண்ண உதட்டு சாயமாய்
மெல்ல உருண்டு போக நான் ஏங்கிடுவேன்
நெற்றி நடுவிலே சிறு பொட்டு போலவே
உடன் ஒட்டி கொண்டு நான் வாழ்ந்திடுவேன்
கணு காலிலே ஆயுள் கைதியாகவே
வெள்ளி கொலுசாக நான் ஆகிடுவேன்
என்றும் உன் காதலனாக