தனிமையில் இனிமை
வண்ண கனவுமே
வர்ணமின்றி கலையுமோ?...
எண்ண குவியலுமே
ஏக்கமுற்று தேயுமோ?...
சிறகொன்று இருந்திருந்தால்
சிறையுற்றிருக்க மாட்டேன் நான்.....
இறகின்றி போனதாலோ
இத்தனிமையிலே தாகம் கொண்டேன்...
தனிமை இல்லா தானிருந்தால் - அதில்
இனிமை காண இயலா திருந்தால்...
வண்மை கொண்ட உள்ள மதும்
வறுமை கொண்டு வாடி ருக்கும்...
வண்ணம் கொண்ட கனவு களும்
வனப்பிழந்து ஓய்ந்திருக்கும்....
ஆகையால்......
திண்மை கொண்டு தனிமையிலும் திறமை படைப்போம்.....