வலி
பிடித்தவர்கள் விலகும் வலி அதை
படிப்பவர்களுக்கு தெரியாது...
நடிக்கிறார் என்பார்கள்..
நகைத்து சிரிப்பார்கள்...
//----//
கதைத்து போனவர்கள்
காரியமென்றல்
காலையில் வருவார்கள்.
//----//
உதிர்ந்த கனி
இறந்து போகவில்லை.
மீளும் ஒருநாள்
எருவாகவோ..
இல்லை விதையாகவோ...
//----//