வலி

பிடித்தவர்கள் விலகும் வலி அதை
படிப்பவர்களுக்கு தெரியாது...
நடிக்கிறார் என்பார்கள்..
நகைத்து சிரிப்பார்கள்...

//----//

கதைத்து போனவர்கள்
காரியமென்றல்
காலையில் வருவார்கள்.

//----//

உதிர்ந்த கனி
இறந்து போகவில்லை.
மீளும் ஒருநாள்
எருவாகவோ..
இல்லை விதையாகவோ...

//----//

எழுதியவர் : மருத கருப்பு (20-Jun-20, 9:42 am)
சேர்த்தது : மருத கருப்பு
Tanglish : vali
பார்வை : 125

மேலே