விழுதுகள்

வேர் தாங்க விழுந்து தொட்டது
பூமியை பற்றி நிமிர்ந்தது
பெற்றவர் பலம் குன்றும்போதும்
நண்பர்கள் நலிவுறும்போதும்
மனிதனை மனிதனாய் பார்த்து
அன்பு செய்யும்போதும்
அறம் எனும் சொல்லுக்கு
ஆறாம் அறிவுடன்
துணை நிற்கும்போதும்
சான்றோர் சொல் சங்கடமாயினும்
சத்தியத்திற்காய் ஒன்றுபடும்போதும்
சுமை என பாராமல் சுகமென காண்போர்
யாவரும் நிஜம் தாங்கும் விழுதுகளே

எழுதியவர் : vincy (27-Jun-20, 10:33 pm)
சேர்த்தது : vincy
Tanglish : vizhuthukal
பார்வை : 88

மேலே