ஜாதிகள் இரண்டு
ஒவ்வொரு காலத்திலும்
ஜாதிகள் இரண்டே இரண்டு...
மனிதன் தோன்றிய காலத்தில்
ஆண் ஜாதி... பெண் ஜாதி...
வள்ளுவர் வாய்மொழியில்
கற்றோர்... கல்லாதவர்...
ஔவையாரின் நல்வழி சொன்னது
இட்டார் பெரியோர்... இடாதார் இழிகுலத்தோர்...
மகாகவி பாரதி சொன்னது...
நீதி உயர்ந்தமதி கல்வி
அன்பு நிறைய உடையவர்கள்
மேலோர்...
மற்றோரெல்லாம் கீழோர்...
இப்போது...
கொரோனா உள்ளவர்கள்
கொரோனா இல்லாதவர்கள்...
ஜாதிகள் அவ்வளவே...
👍👏😀💐