கம்பன் எழுதாத வரிகள்
கம்பன் எழுதாத
வரிகள் கொடுக்கின்றது.
உமது விழிகள்.
அவன் கரங்களில்
சிக்கிடாத சொற்களையெல்லாம்
வாரிக் கொடுக்கின்றது.
உனது இதழ்கள்.
தேக்கு மரம் என்றான்
சின்ன யானை என்றான்
ஓர் பெரும் கவிஞன்.
அத்தனையும் ஓரம் கட்டி
காமக் கடலை வாரிக்
கொடுக்கிறது.
என்னிடம் உமது உடல்கள்.
உன் கட்டு மீசை குட்டிக்
கவிதை எழுதும் வண்ணம்.
கொட்டிச் செல்கிறது
புதுப் புது வர்ணனைகள்.
விரிந்த மார்பில்
தெரிந்து பாதி தெரியாமல் மீதி மறைந்திருக்கும் முடிகள் .
என் விழியின் பாதை நோக்கி
ஓடி வந்து
எனது மூடிய நெஞ்சத்தில்
கூடி நின்று.
கொடுக்கின்றது சுவையோடு
காதல் பாடல்கள்.
மின்னிடும் பொன்னும்
மலந்திடும் மலரும்.
உந்தன் புன்னகை முன்னே
வெறும் மண்ணுளிகள்.
கறுக்காத வானம்
கறுத்திடும் மேகம்
உறங்காத காற்று
ஓட்டம் நிறுத்தாத முகில்.
இத்தனையும் குறுக்கே வந்து
மறித்தாலும் மறைத்தாலும்
காத்திருக்கும் உந்தன் முகம்
பார்த்திடவே எந்தன் விழிகள்.
(ஓவியருக்கு வாழ்த்துகள்)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
