வகுப்பாசிரியர் அவர்களுக்கு

கோபப்பட்டு திட்டினாலும் நாங்கள்
கோபித்து கொள்ள மாட்டோம்
எம் மனம் புண்படா வண்ணம்
நீவிர் உதிர்க்கும் புன்னகையால்
வகுப்பாசிரியராய் வந்து வகுப்பை
வகுப்பை அலங்கரித்து எங்கள்
மனதை எல்லாம் அபகரித்தீர்
புரியாத புதிராகவே இருந்துள்ளீர்
பல நேர்ங்களில்,
உங்கள் கடமையாற்றிட
எனினும் நாங்கள் புரிந்துதான்
வைத்துள்ளோம் எங்கள் காரியமாற்றிட
வர்ணிக்க இயலா அன்பு
வார்த்தையில் அடங்கா பொறுமை
குருபக்தியை கடந்த நட்பு
உணர்வோடு உறைந்த கடமை
புகைப்படமாய் கைதுசெய்ய முயன்றிருக்கிறேன்
முடிந்ததில்லை....
நிழற்படமாய் கைதுசெய்து மகிழ்கிறேன்
நினைவுகளை........

எழுதியவர் : moonchanta (28-Jul-20, 4:43 pm)
சேர்த்தது : தமிழ்தாரணி
பார்வை : 5822

மேலே