சுய தரிசனம்

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு
□□ சுய தரிசனம் □□
கவிதைமணி நன்றி

தன்னைத்தானே நேசித்துக் கொள்வதே
சுய தரிசன மெனலாம்

அது போலவே அயலாரை நேசி என்பின்
அது வயபடும் தரிசனம்

இவையிரண்டும் சேர்த்து இனங்கூற
வியலா மாய தரிசனம்

உருவெடுத்து கடவுளின் கருணையைப்
பெரும் தெய்வ தரிசனம்

இவ்வாறான முடிவதைத் தான் கூறுவர்
தீர்க்க மான தரிசனம்

கண்ணீரை தான் வடிக்கக் கிடைக்கும்
கடவுள் காணகிடைப்பாரோ

உன்னை நீயே அறிதல் அவசிய மதுவே
பாதையை காட்டி தருகிறது

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (4-Aug-20, 5:00 pm)
Tanglish : suya tharisanam
பார்வை : 91

மேலே