கண்ணன் துதி
கார்முகில் கண்ணா மணிவண்ணா முகுந்தா
கானகமெல்லாம் ஆவுடன் திரிந்தும் மேனியும்
கரியாய் கருமாணிக்கமாய் வெகுவே ஒளிர்ந்திட
வேய்ங்குழல் ஊதி ஈரேழு உலகையும்
உன்பால் ஈர்க்கும் மாயபிரானே மாதவா
நின்தாள் தஞ்சம் துணை நீயே