வந்தே மாதரம்🇮🇳🙏🏽

வந்தே மாதரம்!!🇮🇳🙏🏽

தன்னலம் கருதாமல்
பொது நலம் கருதி
காந்தியார் வழி நடந்து
அஹிம்சையை ஆயுதமாக ஏந்தி
பல இன்னல்களை சந்தித்து
பல தியாகிகள் செய்த உயிர் தியாகங்கள்,
நாம் பெற்ற
போற்றி பாதுகாக்க வேண்டிய
அறிய பொக்கிஷமான
நம் சுதந்திரம்.

அந்த தியாகிகளை நினைத்து
அந்த உயர் சிந்தனை மகான்களுக்கு
நன்றி தெரிவித்து
நாம் நம் சுதந்திரத்தை
கொண்டாடுவோம்.

பண் முகம் கொண்ட பாரதத்தை நம் உயரை கொடுத்து பாதுகாப்போம்.
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை
மதம் பேதமின்றி, சாதி பாகுபாடின்றி, அனைவரும் சமத்துவமாக
சகோதர, சகோதரிகளாக
ஒரே குடும்பமென
ஒற்றுமையுடன்
வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.
இந்தியனாக பிறந்ததற்கு பெருமை அடைவோம்.
வந்தே மாதரம்!!
வந்தே மாதரம்!!
வாழ்க பாரதம்!!
வாழ்க பாரதம்!!
வளர்க அதன் புகழ்!!
வளர்க அதன் புகழ்!!
- பாலு.

எழுதியவர் : பாலு (14-Aug-20, 8:02 pm)
சேர்த்தது : balu
பார்வை : 43

மேலே