கற்றாழை -- மூலிகையின் பயன்கள்

கற்றாழை ! நீங்கள் அறியாத ஒரு தொல்லைக்கு அசத்தலான தீர்வை வழங்கும் ! நமது இல்லங்களில் இருக்கும் கற்றாழை செடியின் மருத்துவ குணங்கள் பெருமளவு நமக்கு நன்மையை வழங்குகிறது . அந்த வகையில் , கற்றாழையை உலர்த்தி பொடியாக வைத்து சாப்பிடுவதன் மூலமாக உடல் வலி குறையும் . உடலுக்கு இளமை பெருகும் மற்றும் அதிகளவு நமது வாழ்க்கையை அதிகரிக்கும் . இதில் இருக்கும் மருத்துவ குணங்களை காண்போம் .

கற்றாழை செடியின் உள்பகுதியில் இருக்கும் கூழை எடுத்து சிறிதளவு சாப்பிட்டு வந்தால் கண்பார்வையானது நன்றாக இருக்கும் . பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீர் சுரப்பியில் இருக்கும் புண்கள் குணமாகும் .

தினமும் காலையில் சாக்கலேட் துண்டைப் போல அளவுள்ள கற்றாழை துண்டை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் குடலில் இருக்கும் நச்சுகள் அனைத்தும் வெளியேறி , வாயுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு நமது உடல் நலமானது பாதுகாக்கப்படுகிறது . உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் உடலின் உள்ளுறுப்புகளின் வெப்பமானது குறையும் உடல் வெப்பம் கட்டுக்குள் இருக்கும் . உடலுக்கு பொலிவும் கிடைக்கும் .

சோற்றுக்கற்றாழைக்கு இடையில் வெந்தயத்தை வைத்து கட்டி ஒரு நாள் காத்திருந்து , வெந்தயம் முளைவிட்டவுடன் அதனை சாப்பிட்டால் தீராத வயிற்று வலி மற்றும் புண் ஆகியவை நீங்கும் .கற்றாழை சோற்றுடன் மோரை சேர்த்து குடித்து வந்தால் முகப்பரு போன்ற கோடைகால நோய்களில் இருந்து தப்பிக்க இயலும் .

கற்றாழை செடியின் வேர்களை தினமும் பாலில் சேர்த்து குடித்து வந்தால் உயிரணுக்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கும் . கற்றாழை சாற்றுடன் இஞ்சி , சீரகம் மற்றும் நெல்லிக்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் , தலைசுற்றல் , குமட்டல் மற்றும் வாத்து தொல்லை நீங்கும் .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (16-Aug-20, 8:10 am)
பார்வை : 95

சிறந்த கட்டுரைகள்

மேலே