அப்பாவின் மரணம்
கரு கொடுத்தவன்
கரு சுமந்தவளை தேடி
காடு நோக்கி சென்றிட..
கருவில் வந்தவனோ
வேரறுந்த மரக்கிளையாய்
வெற்றிடமாய் மாறிப்போன
மனைதனில் கண்களறியா
பாரமது அவன் மனதையழுத்த
அழுதும் அழாமலும்
கருமை இரவுகளும்
சில மணிகள் வெண் பகலாய்..
------------------
சாம். சரவணன்