குழந்தைக்காக

நீயும் நானும் எழுதிடும்

வண்ண ஓவியம் குழந்தையோ

முடியும் முன்னே விடிந்திடும்

இரவு வானம் அனுதினம்

முயன்று பார்க்க முயல்கிறேன்

உன் கருணை வேண்டும்

தினம் தினம்

பத்து மாதம் தவணைதான் - உன்

கையில் ஏந்தும் குழந்தையாய்

இனிய பொழுதுகள் நினைவிலே

நினைக்கும்தோறும்

இனிமையே...

எழுதியவர் : த.பசுபதி (3-Sep-20, 9:42 am)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 112

மேலே