திண்டிவனம்

திண்டிவனம் நீர்நிலைகள் சூழ்ந்த அழகிய நகரம் ....
எத்திசையிலும் ஏரிகளும் குளங்களுமாய்.....

மன்னன் வாழ்ந்து!
மரங்கள் சூழ்ந்து!
காலம் கடந்து!
நவீனம் புகுந்து
எல்லாம் அழிந்து!
நாகரீகம் என்ற போர்வையில்!
நவீன காலத்து மக்களின் பரிசுகளாய்!
மன்னன் விட்டுச் சென்ற இடமெல்லாம் மலக் குவியல்களும் குப்பை மேடுகளும்........
எத்தனை! எத்தனை!
கடின உழைப்பால்...
நமது முன்னோர்கள் உருவாக்கிய
காலம் கடந்து கம்பீரமாய் காட்சி தந்த மதகுகளும் குமிழித் தூண்களும்! ஆக்கிரமிப்பால்,விவசாய நிலங்களின் அழிவால் கண் முன்னே இருந்து காணாமலே போய்க் கொண்டிருக்கிறது......
எத்தனை😔 எத்தனை😔
வேதனையான விடயம்.......
#ர_ஸ்ரீராம்_ரவிக்குமார்

எழுதியவர் : ர ஸ்ரீராம் ரவிக்குமார் (23-Sep-20, 6:40 pm)
பார்வை : 28

மேலே