அல்லி மலர்

சந்திரன் நான் வந்த பிறகும்
அல்லி மலரே இன்னும்
ஏன் நீ மலரவில்லை...??

நேற்று...
நான் வரவில்லை என்ற
கோபம்தானே,,,

நேற்று அமாவாசை
என்பதை மறந்து விட்டு
என்னிடம் கோபம் கொள்வது
எந்த வகையில் நியாயம்..!!

உன் கோபத்தை விட்டு
மலர்ந்து விடு.மலரே..!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Oct-20, 9:15 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 121

மேலே