தமிழில் எழுதும் போது நாம் செய்யும் தவறுகள்
தமிழில் எழுதும் போது நாம் தெரிந்தோ , தெரியாமலோ , கவனக்குறைவாலோ பல தவறுகளை ஒற்றுப் பிழைகளை செய்கிறோம் . சில எடுத்துக்காட்டுகளை அவற்றுக்கான சரியான பதத்தையும் இங்கு பார்க்கலாம் .
வாழ்த்துக்கள் என்பது தவறு . வாழ்த்துகள் என்பதே சரி . இங்கு ஒற்று மிக கூடாது .
வாழ்க வளமுடன் என்பது தவறு . வாழ்க வளத்துடன் என்பதே சரி .
நிகழும் மங்களகரமான ஆண்டு என்று அழைப்பிதழில் அச்சிடுவது தவறு . நிகழும் மங்கலமான என்பதே சரியான பதம் .
மங்கள இசை என்றால் ஒப்பாரி . அதாவது கடைசி பயணத்தின் போது இசைப்பது . மங்கல இசை என்றால் தொடக்கம் . தொடக்கத்தில் வாசிப்பது . இசை அரங்குகளில் மங்களம் பாடுவது கடைசியில் தான் . ஒரு கதையில் முடிவில் சுப மங்களம் என்று முடிப்பார்கள் . இனிதே முடிவுற்றது என்று பொருள் .சிலர் தங்கள் பெண்குழந்தைக்கு "மங்களா "என்று பெயர் சூட்டுவர் . இதற்கு இனி குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டனர் , இதுவே கடைசி க் குழந்தை , அதனால் மங்களா என்று பெயர் சூட்டியுள்ளனர் என்று பொருள்.
திருவள்ளுவர் கூட தம் குறளில்
மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கள் பேரு
என்று பாடியிருக்கிறார் . மங்கலம் என்றே வந்திருக்கிறது . மங்களம் என்று வரவில்லை , நோக்குக .
துவக்கம் என்பது தவறு . தொடக்கம் என்பதே சரியான சொல் .
நச்சுன்னு ஒரு பாட்டு , நச்சுன்னு பேசு என்ற பதங்கள் தவறு .நச்சு என்றால் நஞ்சு . நச்சுன்னு ஒரு பாட்டு என்றால் நஞ்சு போன்ற பாட்டு என்று பொருள் . நறுக்கென்று பேசுவதே நச்சுன்னு என்று மருவி வந்துள்ளது . நறுக்குன்னு பாட்டு , நறுக்குன்னு பேசு என்பதே சரி .
நன்றி !