பாரதி பெண்!
வந்தாள் பாரதி பெண்,
வந்தாள் பாரதி பெண்!
கண்ணில் நீரோடு வந்தாள் பாரதி பெண்!
இத்தனை நாள் காத்திருந்தோம்!
பாரதியின் தேடலை நாமும் தேடினோம்!
இருந்தும் அழுகாச்சி பொம்மைகளாய்- பெண்கள்!
அவர் கேட்டது என்ன?
சம உரிமை பெண்களுக்கும்....
பெண்களே அதை தவிர்த்தால் எப்படி?
வீதியில், பெண் தனியாக நடந்தால்,
சுற்றிலும் ஆண்கள் துணையாக அல்ல,
வினையாக வினை செய்ய!
அச்சமில்லை இனி பெண்களுக்கு,
என்றுரைத்தான் அன்றே பாரதி!
இன்றும் அச்சத்தோடு பெண்கள்-பாரதி பெண்கள்
இனி முதல் தேவை-
"பாரதி பெண் அல்ல"
"பாரத ஆண்! பாரதி ஆண்!"
பின் பிறப்பாள் பாரதி பெண்
பாரதத்தில் பாரதத்தில்!!