இறைவன்

போகமும் மோகமும் காமமும் வாழ்க்கை
என்று எண்ணி வாழ்ந்திட இறுதியில்
மூப்பு தாக்க பிணையில் படுத்து
உழலும் போது பேசவும் முடியாது
கண்களில் நீர் வழிகிறது எதை
நினைத்து.... யாரறிவார் .... செய்த பாவங்கள் ?
இது இறைவனிடம் பாவ மன்னிப்பு
மனத்தால் கேட்பதால் வரும் கண்ணீரென்றால்
இந்த ஒரு செய்கைக்கே மகிந்த நீவேண்டுவதை
அருளும் பக்தவத்சலன் இறைவன் அவன்
நாமத்தை தினமும் ஒருமுறையேனும்
மனங்கொண்டு துதித்தால் குறையேதும் இல்லையே
பின்னர் ஏன் தயக்கம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்௦வசுத (28-Oct-20, 5:12 pm)
Tanglish : iraivan
பார்வை : 193

மேலே