கல்வி அறிஞன் காமாட்சி ராஜன்
கனன்றது உன்னுள் பெரும் நெருப்பு
கல்வியின் பால் நீ கொண்ட நல்ஈர்ப்பு
சுழன்றாய் கதிராய் முதல்வராய் பதவி ஏற்று
சூரராய் நெஞ்சுரம் நெடுமைக் கொண்டு
சூழலை கல்வியால் மாற்றம் கண்டு
சுழியமாய் இருந்த வாழ்வை ஏற்றம் செய்து
சூத்திரத்தின் விதையாய் முளைத்தாய் அன்று
நேத்திரங்கள் கல்வியால் நிறைந்தது இன்று
கீரிவிட்ட பாதையினிலே செழித்த விருட்சம்
கீழை மேலை தேசங்களை கூவி அழைக்கும்
வாழையாய் எண்ணி கல்வி மரத்தை நட்டாய் அன்று
வானளவு சந்தன மரமாய் மணம் வீசுது உயர்ந்து
உணவோடு உன்னத கல்வியை ஊட்டி வளர்த்தாய்
உணர்வோடு உன்னைத் தொழுது வாழ்கிறோம் இன்று
----- நன்னாடன்.