மருத்துவ வெண்பா – மொந்தன் வாழைப்பழம் - பாடல் 92
நேரிசை வெண்பா
மந்தமுட னோய்கனத்தல் வாத வலிசீதந்
தொந்தமுறு தாகமிவை தோன்றுங்காண் – புந்திவலி
யோட்டுபித்தங் காமாலை யுள்வறட்சி யுந்தொலையும்
நாட்டுமொந் தன்பழத்தி னால்!
- பதார்த்த குண விளக்கம்
குணம்:
நாட்டு மொந்தன் பழத்தினால் அக்கினி மந்தம், உடல் வலியுடன் பாரிப்பு, இசிவு, சீதளம், திரிதோட தாகம், இவைகள் உண்டாம். மன உறுதியை விலக்குகின்ற பித்தம், காமிலம், மேதோ தாதுவைப் பற்றிய வறட்சி இவை நீங்கும்.