யாரிவ

மூஞ்சிய பாரு மொகறகட்டையன்னு
திட்டிட்டு கடந்து போனவளே,
என் முகத்துக்கென்ன குறைச்சல்ன்னு
நானும் நினைச்சுக்குறேனே
யாருமே யாரையுமே பார்க்காம
இருக்க முடியாதே இங்கே
உன்னை நான் சும்மா தானே
பாத்தேன் எதுவுமே சொல்லலையே
ஆனாலும் என்னமோ பண்ணுதே எனக்குள்ளே
உன்னை இனிமே பாக்காம இருக்க முடியாதே
எதாச்சும் பண்ண தோணுதே
என்ன பண்ணலாம் நீயே சொல்லிட்டு போ
இம்சிக்காம எந்த தொந்தாவும் பண்ணாம
உன்னையே நானினி நினைச்சுட்டே இருப்பேனே
என்னை சீண்டிப்போன சிங்காரமே செல்லமே
ஐ லவ் யூடி, ஆனந்தமடி இனி உன் நெனைப்பே.!

எழுதியவர் : செல்வமணி (31-Dec-20, 9:49 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 130

மேலே