வண்ணம் 117

வண்ணம் : 117
தன்ன தனனன தான தனதனந் தனதான ( அரையடிக்கு )
கண்ணன் குழலிசை யோடு செலுமுளந் தனியாக
கன்னல் மொழியிரு காதி னிலொழுகுஞ் சுகமாக
வெண்ணெய் திருடிய மாய னிதழ்களும் பனியாக
மின்னும் மதியென வாயி லிளகிடும் பதமாக
வண்ண மயிலிற காட வெழில்முகங் கதைபேச
வன்னி யெனவிள மாத ரவன்வசங் களிகூர
எண்ண முழுவது மாயன் நினைவதுந் தினம்மோதும்
எண்ணி மகிழ்வதி லேயெ னிதயமுங் குதிபோடும் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jan-21, 11:04 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 19

மேலே